குற்றப் பரம்பரை [Kutrap Parambarai]
![குற்றப் பரம்பரை [Kutrap Parambarai]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1492591566l/28872275._SY475_.jpg)
Author: வேல ராமமூர்த்தி
Format: Paperback
Pages: 448
Language: Tamil
Publisher: Discovery book palace
Release Date: May 01, 2015
ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த கூட்டஞ்சோறு கதைகருவின் பலம் கருதி குற்ற பரம்பரை என மறு பெயரிடபடுகிறது
வைரங்கலியோ சுரங்கத்திலிருந்துதான் வெட்டிதான் எடுக்க முடியும் ஜூனியர் விகடன் ஆசிரியர் குழு வேலாவின் சுரங்கத்திலிருந்து வைரங்களை வெட்டி எடுத்து அழகு கொழிக்கும் மாலையாகி தந்துள்ளது இதற்காக ஜூ வி யை பாராட்டியே தீர வேண்டும்.
பேரன்பும்
பெருங்கோபமும்
கொண்டவை
என் எழுத்துகள் ...!
-வேல ராம மூர்த்தி
நாவலை மொத்தமாய் படித்து முடிந்ததும் என்னை ஆசுவாசபடுத்தி கொள்ள வெகுநேரம் பிடித்தது குலாணி கிழவி அன்று இரவு முழுக்க அழுகையும் ஆங்காரமும் நின்று கொண்டு என்னை தூங்கவே விடவில்லை . வேலாவை பற்றிய சிந்தனை எனக்குள் வரும்போது அவரை உருவபடுத்த முடியாமல் திணறுவேன். குற்ற பரம்பரை நாவல் வந்தபின் வந்த பின் அடையாளம் கண்டவிட்டேன் நாவலில் வரும் வில்லாயுதம் தான் இந்த வேலா .- தோழமையுடன் எஸ்.ஏ.பெருமாள்
வேல ராம மூர்த்திக்கு இந்த பொய் முகங்கள் தெரிகிறது அவர் தங்கள் ஜனங்களுக்காக கசிகிறார் அவர்கள் அவல நிலை வறுத்த மடையா செய்கிறது . அவரது கோபம் அவரது எரிச்சல் ஆதரவு அணைப்பு ஆதரவு,அணைப்பு அவரது கதைகளாகி இருக்கின்றன.
வேல ராம மூர்த்தியின் முப்பது கதைகளை நான் வாசித்து இருக்கிறேன் முதல் வாசிப்பில் உண்மை கானலும் ,இரண்டாவது முறை கலை அலகுகளும்,சிக்கன வார்த்தை பிரயோகம் முதலியனவையும் புரிபடும்.இலக்கியத்தை திட்டவட்டமான கோட்பாடுகள் வடிவமைத்து கொண்டு எழுதுகிற எழுத்தாளர் வேல ராம மூர்த்தி .- நேசமுடன் பிரபஞ்சன்